Bhakti

Bhakti is the pleasant, smooth, direct path to God.

ஆதிசங்கரரின் ஸ்ரீமந்த்ர மாத்ருகா புஷ்பமாலா

ஆதிசங்கரர் எழுதிய சுலோகம்   மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் 
 

  தேவி வழிப்பாட்டில் ஸ்ரீவித்யா மார்க்கத்தில் அம்பிகைக்குரிய முக்கிய மந்திரம் ஒன்று இருக்கிறது. பதினைந்து எழுத்துக்களால் - அக்ஷரங்களால் - ஆகியது.



    ஓர் அக்ஷரம் என்பதை நாம் சாதாரணமாக 'எழுத்து' என்று குறிப்பிடும் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதில் மெய்யெழுத்துக்களைச் சேர்ப்பதில்லை.


                    உதாரணமாக -
    'மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம்' என்பதில்
    'மந்த்ர' - 2 அக்ஷரங்கள்
    'மாத்ருகா' - 3 அக்ஷரங்கள்
    'புஷ்பமாலா' - 4 அக்ஷரங்கள்
    'ஸ்தவம்' - 2 அக்ஷரங்கள்
    'பாண்ட்ய' என்பதில் 2 அக்ஷரங்கள்தாம்.
                    ஒவ்வொரு எழுத்துக்கும் மாத்திரைக்கணக்கு என்பதும் உண்டு. மெய்யெழுத்து, உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, நெடில், குறில், அளபு போன்றவற்றிற்கெல்லாம் குறிப்பிட்ட மாத்திரைக் கணக்கு   உண்டு.


                    பதினைந்து அக்ஷரங்கள்.
                    ஆகையால் அதற்கு 'பஞ்சதசாக்ஷரி' என்று பெயர்.


                    பதினாறு பாடல்கள் அந்த தோத்திரத்தில் இருக்கும்.
                    பஞ்சதசாக்ஷரியில் இருக்கும் பதினைந்து பாடல்கள்.
                    பதினாறாவது பாடல் பலஸ்ருதி எனப்படும் பலன்களைச் சொல்லும் ஆசீர்வாதப்பாடல். தமிழில் இதனைத் 'திருக்கடைக்காப்பு' என்று குறிப்பிடுவார்கள்.


                    ஒவ்வொரு பாடலும் பஞ்சதாசாக்ஷரியின் ஒவ்வொரு எழுத்தில் தொடங்கும்.
    ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உபசாரத்தைச் செய்வதாக அறிவிக்கும்.


    முதற் பாடல்.


கல்லோ லோல்லஸித அம்ருதாப்தி லஹரி
    மத்யே விராஜன் மணீ
த்வீபே கல்பக வாடிகா பரிவ்ருதே
    காதம்பவாட் யுஜ்வலே
ரத்னஸ்தம்ப ஸஹஸ்ர நிர்மித ஸபா
    மத்யே விமானோத்தமே
சிந்தாரத்ன விநிர்மிதம் ஜனனி தே
    ஸிம்ஹாஸனம் பாவயே


    பொருள்: அலைகள் விளங்கும் அமுதக்கடலில் சோபிக்கும் மணித்தீவில்,  
        கற்பகமரங்கள் சூழ்ந்த  கதம்பவனத்தில், ரத்தினத் தூண்கள்  நிறைந்த
        சபை நடுவில் இருக்கக்கூடிய விமானத்தில்  உன்னுடைய சிந்தாமணி
        என்னும் சிம்மாசனத்தைத் தியானம்  செய்கிறேன்.


    இரண்டாவது பாடல்:


ஏணாங்கானல பானுமண்டல லஸத்
    ஸ்ரீசக்ர மத்யே ஸ்திதாம்
பாலார்க்க த்யுதி பாஸ¤ராம் கரதலை:
    பாசாங்குசௌ பிப்ரதீம்
சாபம் பாணம் அபி ப்ரஸன்ன வதனாம்
    கௌஸ¤ம்ப வஸ்த்ரான் விதாம்
தாம் த்வாம் சந்த்ர கலாவதம்ஸ மகுடாம்
    சாருஸ்மிதாம் பாவயே


பொருள்: சந்திர சூரிய அக்கினி மண்டலங்கள் கூடிய ஸ்ரீசக்கரத்தில்
    அமர்ந்து, கரங்களில் பாசம், அங்குசம், வில், அம்பு ஆகியவை
    தாங்கி, இளஞ்சூரியனாக மலர்ந்த முகமும், சிவந்த உடையும்,
    மகுடத்தில் பாதி மதியும் கொண்டு, மந்தஹாசத்துடன் விளங்கும்
    உன்னை தியானிக்கிறேன்.


    மூன்றாவது பாடல்:


ஈசானாதிபதம் சிவைக பலகம்
    ரத்னாசனம் தே சுபம்
பாத்யம் குங்கும சந்தனாதி பரிதைர்
    அர்க்யம் ஸரத்னாக்ஷதை:
சுத்தை ராசமனீயகம் தவ ஜலைர்
    பக்த்யா மயா கல்பிதம்
காருண்ய அம்ருத வாரிதே ததகிலம்
    ஸந்துஷ்டயே கல்பதாம்


பொருள்: ஈசன் முதலாகிய நான்கு தேவர்களைக் கால்களாகவும்
    சதாசிவனைப் பலகையாகவும்கொண்ட சிம்மாசனத்தையும்,
    குங்குமப்பூ, சந்தனாதி பொருட்கள் நிறைந்த நீரினால்
    பாத்யத்தையும், அர்க்யத்தையும், ரத்தின அக்ஷதையுடன்
    கூடிய நீர்களால் ஆசமனீயத்தையும் பக்தியுடன் உனக்குக்
    கல்பிக்கிறேன். இவை உனக்கு மகிழ்ச்சியை அளிக்கட்டும்.


    நான்காவது பாடல்:
   
லக்ஷ்யே யோகி ஜனஸ்ய ரக்ஷ¢த ஜகஜ்
    ஜாலே விசாலேக்ஷணே
ப்ராலேயாம்பு படீர குங்கும லஸத்
    கற்பூர மிச்ரோதகை:
கோக்ஷ£ரைரபி நாலிகேர ஸலிலை:
    சுத்தோதகைர் மந்த்ரிதை:
ஸ்நானம் தேவி தியா மயைத தகிலம்
    ஸந்துஷ்டயே கல்பதாம்


பொருள்: யோகிகளின் லட்சியமான தேவியே! அகண்ட விழிகளுடையவளே!
    குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைப்பொருள்கள்
    நிறைந்த குளிர்ந்த நீர், பசும்பால், இளநீர், மந்திரிக்கப்பட்ட
    சுத்தமான நீர் முதலியவற்றால் நீ மகிழ்வுறும்வண்ணம்
    திருமஞ்சன நீராட்டு செய்வதாகப் பாவிக்கிறேன்.


    ஐந்தாவது பாடல்:


ஹ்ரீங்காராங்கித மந்த்ர லக்ஷ¢த தநோ
    ஹேமாசலாத் ஸஞ்சிதை:
ரத்னைருஜ்வலம் உத்தரீய ஸஹிதம்
    கௌஸ¤ம்பவர்ணாம் சுகம்
முக்தா ஸந்ததி யஜ்ஞஸ¥த்ர மமலம்
    ஸௌவர்ண தந்தூத்பவம்
தத் தம் தேவி தியா மயைத தகிலம்
    ஸந்துஷ்டயே கல்பதாம்


பொருள்: ஹ்ரீங்கார மந்திரத்தையே உடலாகக்கொண்டவளே! பார்வதியே!
    மணிக்கற்களால் பிரகாசிக்கும் உத்தரீயத்துடன் செந்நிற
    ஆடையும் பொற்தந்தியில் கோக்கப்பட்ட முத்துக்களால்
    ஆகிய பூணூலையும் உனக்கு சமர்ப்பிப்பதாகக் கல்பிக்கிறேன்.


    ஆறாவது பாடல்:


ஹம்ஸைரப் பதிலோபனீய கமனே
    ஹாரவலீம் உஜ்வலாம்
ஹித்தோல த்யுதிஹீர பூரி ததரே
    ஹேமாங்கதே கங்கணே
மஞ்சீரௌ மணிகுண்டலே மகுடம்
    அப்யர்த்தேந்து சூடாமணிம்
நாஸா மௌக்திகம் அங்குலீய கடகௌ
    காஞ்சீமபி ஸ்வீகுரு


பொருள்:    இந்தப் பாடலில் வெவ்வேறு விதமான ஆபரணங்களை
    அம்பிகைக்கு அணிவித்தலைக் குறிப்பிடுகின்றது. கடகம்,
    வாகுவளையம், கங்கணம், பாதகிங்கிணி, மணிகுண்டலம்,
    மகுடம், முத்து மூக்குத்தி-பில்லாக்கு, பொன் மோதிரம்,
    சூடாமணி, இடையணி முதலியவற்றை நான் உனக்கு
    (மானசீகமாக) அணிவிப்பதை நீ ஏற்றுக்கொள்வாயாக.


    ஏழாவது பாடல்:


ஸர்வாங்கே கனஸார குங்குமகன
    ஸ்ரீகந்த பங்காங்கிதம்
கஸ்தூரி திலகஞ்ச பாலபலகே
    கோரோசனா பத்ரகம்
கண்டாதர்சன மண்டலே நயனயோர்
    திவ்யாஞ்சனம் தேஅஞ்சிதம்
கண்டாப்ஜே ம்ருநாபி பங்கமமலம்
    த்வத் ப்ரீதயே கல்பதாம்


பொருள்: குங்குமப்பூ, நல்வாசனைப்பொருள்கள் சந்தனம் முதலியவற்றுடன்
    உடலுக்குப் பூச்சாக அணிவிக்கிறேன். கஸ்தூரி, கோரோசனை
    ஆகியவற்றால் நெற்றியில் திலகம் இடுகிறேன். முகம் பார்க்கும்
    கண்ணாடியுடன் கண்களில் திவ்வியமான அஞ்சன மையிடுகிறேன்.
    கழுத்துக்குக் கஸ்தூரி அணிவிப்பதாகக் கல்பிக்கிறேன்.


    எட்டாவது பாடல்:


கல்ஹாரோத்பல மல்லிகா மருவகை:
    ஸௌவர்ண பங்கேருஹை:
ஜாதீ சம்பக மாலதீ வகுலகைர்
    மந்தார குந்தாதிபி:
கேதக்யா கரவீரகைர் பஹ¤விதை:
    க்லுப்தா: ஸ்ரஜோ மாலிகா:
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
    ஸந்துஷ்டயே க்ருஹ்யதாம்


பொருள்: பலவிதமான மலர்கள் சூட்டி அம்பிகையை மகிழ்விப்பதை
    இப்பாடல் குறிப்பிடுகிறது. சென்க்கழுநீர், நீலம், மல்லிகை,
    மருக்கொழுந்து, பொற்றாமரை, ஜாதி மல்லிகை, முல்லை,
    மகிழம்பூ, மந்தாரை போன்ற மலர்களை என் சங்கல்பத்தால்
    உனக்கு சமர்ப்பிக்கிறேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வாயாக.


    ஒன்பதாவது பாடல்:


ஹந்தாரம் மதஸ்ய நந்தயஸி யைர்
    அங்கைர் அனங்கோஜ்வலை:
யைர் ப்ருங்காவலி நீல குந்தல பரைர்
    பத்னாஸி தஸ்யாசயம்
தானீமானி தவாம்ப கோமலதரான்
    யாமோத லீலாக்ருஹான்
யாமோதாய தசாங்க குக்குலு க்ருதைர்
    தூபைர் அஹம் தூபயே


பொருள்: பலவகையான வாசனைப்பொருள்கள், மருத்துவ மூலிகைப்
    பொருள்கள், தசாங்கம், குங்கிலியம் போன்றவற்றைக்
    கலந்து, மன்மதனை எரித்த சிவனும் மோகிக்கும்
    உன் அங்கங்களுக்கும் அவனைக் கவரும் கூந்தலுக்கும்
    தூபம் காட்டுகிறேன்.


    பத்தாவது பாடல்:


லக்ஷ்மீ முஜ்வலயாமி ரத்ன நிவஹோத்
    பாஸ்வத்தரே மந்திரே
மாலாரூப விலம்பிதைர் மணிமய
    ஸ்தம்பேஷ¤ ஸம்பாவிதை:
சித்ரைர் ஹாடக புத்ரிகாகரத்ருதைர்
    கவ்யைர் க்ருதைர் வர்த்திதை:
திவ்யைர் தீபகணைர் தியா கிரிஸ¤தே
    ஸந்துஷ்டயே கல்பதாம்


பொருள்: பசு நெய்யால் ஏற்றப்பட்ட திவ்ய தீபங்கள் கொண்டு
    உன்னுடைய சிறந்த அழகை இன்னும் சோபிக்கச்செய்கிறேன்.


    பதினோராவது பாடல்:


ஹ்ரீங்காரேஸ்வரி தப்த ஹாடக க்ருதை:
    ஸ்தாலீ ஸஹஸ்ரைர் ப்ருதம்
திவ்யான்னம் க்ருதஸ¥ப சாகபரிதம்
    சித்ரான்ன பேதம் ததா
துக்தான்னம் மதுசர்க்கரா ததியுதம்
    மாணிக்யபாத்ரே ஸ்திதம்
மாஷாபூப ஸகஸ்ர மம்ப ஸபலம்
    நைவேத்ய மாவேதயே


பொருள்: பல பொற்பாத்திரங்களில் பசுவின் நெய், பருப்பு, கறிவகைகள்,
    திவ்யான்னம், சித்ரான்னங்கள், தேன், பாற்சோறு, பலவிதமான
    பழங்கள், வடைகள் முதலியவற்றை மாணிக்கப்பாத்திரங்களில்
    நைவேத்தியமாக சமர்ப்பிக்கின்றேன்.


பன்னிரண்டாவது பாடல்:


ஸச்சாயைர் வரகேத கீதல ருசா
    தாம்பூலவல்லீ தலை:
பூகைர் பூரிசூர்ணை: ஸ¤கந்தி மதுரை:
    கர்ப்பூர கண்டோஜ்வலை:
முக்தாசூர்ண விராஜிதைர் பஹ¤விதைர்
    வக்த்ராம் புஜா மோதிதை:
பூர்ணாரத்ன கலாசிகா தவமுதே 
    ந்யஸ்தா புரஸ்தா துமே


பொருள்: வெற்றிலை, வாசனைப் பாக்குத்தூள், பச்சைக்கற்பூரம், முத்திலிருந்து
    தயாரிக்கப்பட்ட சுண்ணம்  முதலியவை கொண்ட ரத்தினத்தால்
    ஆன வெற்றிலைப் பெட்டியைச் சமர்ப்பிக்கின்றேன்.


பதின்மூன்றாவது பாடல்:


கன்யாபி: கமனீய காந்திபிர்
    அலங்காரா மலாராத்ரிகா
பாத்ரே மௌக்திக சித்ர
    பங்க்தி விலஸத் கர்ப்பூர தீபாலிபி:
தத்தத் தால ம்ருதங்க கீத ஸஹிதம்
    ந்ருத்யத் பதாம்போருஹம்
மந்த்ராரான பூர்வகம் ஸ¤நிஹிதம்
    நீராஜனம் க்ருஹ்யதாம்


பொருள்: பாட்டு, தாளமேளம், நாட்டியம் முதலியவற்றுடன் முத்துக்கள்
    வரிசையுடன் சிறந்துவிளங்கும் தீபப் பாத்திரத்தில் காந்தியுடன்
    விளங்கும் கற்பூர தீபத்தை உன் பாஅங்களுக்கு நீராஜனமாகக்
    காட்டுகிறேன்; ஏற்றுக்கொள்.


பதினான்காவது பாடல்:


லக்ஷ்மீர் மௌக்திக லக்ஷ கல்பித
    ஸிதச்சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீ ச ரதிச்ச சாமரவரே
    தத்தே ஸ்வயம் பாரதீ
வீணா மேண விலோசனா: ஸ¤மனஸாம்
    ந்ருத்யந்தி தத்ராகவத்
பாவைராங்கிக ஸாத்லிகை: ஸ்புடரஸம்
    மாதஸ் ததா லோக்யதாம்


பொருள்: லக்ஷ்மி குடை பிடிக்க, இந்திராணியும் ரதியும் சாமரம் வீச
    சரஸ்வதி வீணை வாசிக்க, தேவமகளிர் நாட்டியம் ஆட,
    இசையுடன் கூடிய பாட்டுக் கேட்கப்படட்டும்.


    பதினைந்தாவது பாடல்:


ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேண
    மனுனோபாஸ்யேத்ரயீ மௌலிபி:
வாக்யைர் லக்ஷ்யதனோ தவ  ஸ்துதிவிதௌ
    கோ வா க்ஷமேதாம்பிகே
ஸல்லாபா: ஸ்துதய: ப்ரதக்ஷ¢ண சதம்
    ஸஞ்சார ஏவாஸ்து தே
ஸம்வேசோ மனஸ: ஸமாதி ரகிலம்
    த்வத்ப்ரீதயே கல்பதாம்


பொருள்: மூன்று ஹ்ரீங்காரங்கள் கூடிய மந்திரத்தால் உபாசிக்கப்
    படுபவளே! வேதாந்த வாக்கியங்களின் லட்சியமானவளே!
    என்னுடைய பேச்செல்லாம் உனக்கு தோத்திரங்களாகவும்,
    என் சஞ்சாரங்களெல்லாம் உனக்குப் பிரதட்சிணமாகவும்,
    நான் படுப்பதெல்லாம் உனக்கு நமஸ்காரங்களாகவும்
    இருக்கட்டும்.   


    பதினாறாவது பாடலை பலஸ்ருதி என்னும் அமைப்பில்
பாடியுள்ளார். திருஞானசம்பந்தரின் திருப்பதிகங்களின் பதினோறாவது
பாடலாகிய திருக்கடைக்காப்புப் போன்றது.




ஸ்ரீ மந்த்ராக்ஷர மாலயா கிரிஸ¤தாம்
    ய: பூஜயேத் சேதஸா
ஸந்த்யாஸ¤ ப்ரதிவாஸரம் ஸ¤நியதஸ்
    தஸ்யாமலம் ஸயான்மன:
சித்தாம்போருஹ மண்டபே கிரிஸ¤தா
    ந்ருத்தம் விதத்தே ரஸாத்
வாணீ வக்த்ர ஸரோருஹே ஜலதிஜா
    கேஹே ஜகன் மங்களா


    இந்த மந்திர அட்சர மாலையினால் அம்பிகையை யார்
துதிக்கிறார்களோ, அவர்கள் சித்த சுத்தி அடைவார்கள்; அவர்கள்
மனதில் தேவி நர்த்தனம் புரிவாள்; வாக்கில் சரஸ்வதியும்
அவர்களின் இல்லங்களில் லக்ஷ்மியும் வாசம் செய்வார்கள்.


இதி கிரிவ்ரபுத்ரீ பாதராஜீவபூஷா
    புவன மமலயந்தீ ஸ¥க்தி ஸௌரப்ய ஸாரை:
சிவபத மகரந்த ஸ்யந்தினீயம் நிபத்தா
    மதயது கவிப்ருங்கான்  மாதுருகா புஷ்பமாலா


இந்த மாத்ருகா புஷ்பமாலை மகிழ்ச்சியை தரட்டும  இதெல்லாம் மானச பூஜை. அதுவும் பஞ்சதாசாட்சரி மந்திரம் அடங்கியது.
Source-சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி

லக்ஷ்மி சுலோகம்

 அகத்தியர் எழுதிய லக்ஷ்மி சுலோகம்
அகத்திய முனிவர் தம்முடைய மனைவி லோபாமுத்திரையோடு கொல்லாபுரம் என்னும் ஊருக்குச் சென்றார். அங்கு திருமகள் திருக்கோயில் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றபோது திருமகள்மீது இப்பாடல்களைப் பாடிப்போற்றினார்.

                அப்போது திருமகள் அகத்தியருக்குக் காட்சி கொடுத்து, "உன்னுடைய 'போற்றி' பாடல்களுக்கு நான் மனமகிழ்ந்தேன். இப்பாடலைப் பாடி போற்றினார் யாவரும் கெடுதற்கு அரிய, பெரிய இன்பங்களை நுகர்வார்கள். இப்பாடல்களை
எழுதப் பெற்ற ஏடானது இல்லத்திலே இருக்குமானால் வறுமையைக் கொடுக்கின்ற தவ்வையானவள் அவ்வில்லத்தை அடையமாட்டாள்", என்று
திருவாய் மலர்ந்தருளினாள்.
                இப்பாடல்களை நாள்தோறும் படிப்பவர்கள் பெரும் செல்வத்தை
அடைந்து அச்செல்வத்தை நுகர்வர்.
 இப்பாடல்கள் அதிவீரராமபாண்டியரால் மொழிபெயர்க்கப்பட்ட காசி காண்டத்தில் அவரால் மொழிபெயர்த்துப் பாடப்பட்டவை.
   

    நூல்

மூவுலகும் இடறியற்றும் அடலவுணர்
    உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவையுறழ் திருமேனி அருட்கடவுள்
    அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லா
    புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவையிரு தாழ்தொழுது பழமறைதேர்
    குறுமுனிவன் பழிச்சுகின்றான்

கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
    பொகுட்டி லுறை கொள்கைபோல
மழையுறலும் திருமேனி மணிவண்ணன்
    இதயமலர் வைகுமானே
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
    கரகமலம் முகிழ்த்தெந் நாளும்
கழிபெருங் காதலில் தொழுவோர் வினை தீர
    அருள்கொழிக்கும் கமலக்கண்ணாய்

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
    செழுங்கமலக் கையாய் செய்ய
விமலை பசுங்கழை குழைக்கும் வேனிலான்
    தனையீன்ற விந்தை தூய
அமுத கும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்
    அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன்றிட ஒளிரும் செழுஞ்சுடரே என
    வணக்கம் செய்வான் மன்னோ

மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும்
    செந்துவர் வாய் மயிலே மற்றும்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
    உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி
    மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெரும்சீர்த்தி எம்மனோ
    ரால் எடுத்துச் சொல்லற் பாற்றோ

மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
    தனிபுறக்கு மன்னர்தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
    நிகரில்லாக் காட்சியோரும்
வெல்படையில் பகை துரந்து வெஞ்சமரில்
    வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர் பொகுட்டு றையும் அணியிழை நின்
    அருள்நோக்கம் அடைந்து ளாரே

செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிறும்
    எழில்மேனி திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
    வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
    நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளை நீ, அவணன்றோ மல்லல் வளம்
    சிறந்தோங்கி இருப்ப தம்மா

இலக்குமி தோத்திரப் பலன்

என்று தமிழ்க்குறுமுனிவன் பன்னியொடும்
    இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
"நன்றுனது துதி மகிழ்ந்தோம், நான்மறையோய்,
    இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
    ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
    தவ்வை அவண் மருவல் செய்யாள்".


உரை

மூவுலகும் இடறியற்றும் அடலவுணர்
    உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவையுறழ் திருமேனி அருட்கடவுள்
    அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லா
    புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவையிரு தாழ்தொழுது பழமறைதேர்
    குறுமுனிவன் பழிச்சுகின்றான்

மூன்றுஉலகங்களுக்கும்துன்பத்தைச்செய்தவலிமைபொருந்தியஅசுரர்களுடைய உயிர்கள் உடலைவிட்டு ஒழியுமாறு சினம் கொண்ட காயாமலரை ஒத்த அழகிய உடலினை உடைய அருள் மிக்க திருமாலின் பரந்த மார்பினிடத்தில் விளங்கித் தோன்றி, தேவர்களுடைய உலகத்தைக் காட்டிலும் பெருமையில் சிறந்து திகழும் பெருமையை உடைய கொல்லாபுரம் என்னும் ஊரிலினிதாகச் சேர்ந்து வீற்றிருக்கின்ற பாவையாகிய திருமளின் இரண்டு திருவடிகளையும் பணிந்து பழமையான மறைகளையெல்லாம் ஆராய்ந்து உணர்ந்த அகத்திய முனிவர் புகழ்ந்து பாடலானார்


கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
    பொகுட்டி லுறை கொள்கைபோல
மழையுறலும் திருமேனி மணிவண்ணன்
    இதயமலர் வைகுமானே
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
    கரகமலம் முகிழ்த்தெந் நாளும்
கழிபெருங் காதலில் தொழுவோர் வினை தீர
    அருள்கொழிக்கும் கமலக்கண்ணாய்

"வண்டுகள் கிண்டிப் பண்களைப் பாடுவதற்கு இடமாக விளங்கும் தாமரை மலரின் மென்மையான பொகுட்டின்மீது வாழும்தன்மையைப்போல
கருமுகிலை ஒத்த அழகிய உடலினை உடைய மணிவண்ணனாகிய
திருமாலின் உள்ளத் தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் திருமகளே!
எல்லா உலகங்களையும் இனிதாகப் பெற்ற அருட்கொடியே! கையாகிய
தாமரை மலரைக் குவித்து, எந்த நாளும் மிகுந்த பேரன்பினோடு வணங்குபவர்களுடைய தீவினைகள் ஒழியுமாறு அருளைப் பொழியும்
தாமரை மலர் போலும் கண்களை உடையவளே!"


கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
    செழுங்கமலக் கையாய் செய்ய
விமலை பசுங்கழை குழைக்கும் வேனிலான்
    தனையீன்ற விந்தை தூய
அமுத கும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்
    அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன்றிட ஒளிரும் செழுஞ்சுடரே என
    வணக்கம் செய்வான் மன்னோ

"திருமகளே! அழகிய மறு அமைந்த மார்பினை உடையவனாகிய திருமாலின் இல்லக்கிழத்தியே! செழுமை வாய்ந்த தாமரை மலர்போன்ற கைகளை உடையவளே! செந்நிறமுள்ள விமலையே! பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கின்ற வேனிற் காலத்துக்கு உரியவனாகிய மன்மதனைப் பெற்ற திருமகளே!
தூய்மை வாய்ந்த அமுதம் நிறைந்த குடத்தை ஏந்திய தாமரை மலர் போன்ற கைகளையுடையவளே! திருப்பாற்கடலில் பிறந்தவளே! அன்பர் நெஞ்சத் திமிரமாகிய இருள் அகன்றிட விளங்குகின்ற செழுமையான பேரொளியே!"
என்று வணக்கம் செய்யலானான்.



மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும்
    செந்துவர் வாய் மயிலே மற்றும்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
    உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி
    மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெரும்சீர்த்தி எம்மனோ
    ரால் எடுத்துச் சொல்லற் பாற்றோ


இதழ்களை உடைய மணமுள்ள தாமரைப்பூம்பொகுட்டில் அரசு வீற்றிருக்கின்ற செம்பவழம் போன்ற அதரத்தையுடைய மயில் போன்றவளே! உன்னுடைய கடைக்கண்ணின் அருள் பெற்றதனால் அல்லவா நீலமணி போன்ற வண்ணத்தையுடைய திருமால் உலகம் முழுவதையும் காத்தல் செய்யும் தொழிலை மேற்கொண்டான்? நான்முகனான பிரம்மன் படைத்தல் தொழிலை மேற்கொண்டான்?பசுமையான இளம்பிறையை அணிந்த சிவபெருமானும் அழிக்கும் தொழிலை மேற்கொண்டான்? உன்னுடைய பெரும் புகழானது எம்மைப் போன்றோரால் எடுத்துக்கூறுவதற்கு முடியக்கூடிய தன்மைபடைத்ததோ?


மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
    தனிபுறக்கு மன்னர்தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
    நிகரில்லாக் காட்சியோரும்
வெல்படையில் பகை துரந்து வெஞ்சமரில்
    வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர் பொகுட்டு றையும் அணியிழை நின்
    அருள்நோக்கம் அடைந்து ளாரே


அகவிதழ்களையுடைய தாமரைப் பொகுட்டில் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளே! பொதுவாக விளங்கும் தன்மையையுடைய வளம் பொருந்திய நெடும் உலகம் முழுவதையும் அதனுடைய அந்தப் பொதுவாக விளங்கும் தன்மையை நீக்கி, தமது தனியுடைமையாக்கி, அரசாட்சி செய்யும் மன்னர்களும், கல்வியிலும், பேரறிவிலும், மிகுந்த அழகிலும் ஒப்பில்லாத தன்மையைப் பெற்றவர்களும், வெல்லுகின்ற படையைக் கொண்டு பகைவர்களை விரட்டும் கொடிய
போரில் வெற்றிவாகை சூடும் வீரர்களும் உன்னுடைய திருவருள்
பார்வையைப் பெற்றவர்களே!


செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிறும்
    எழில்மேனி திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
    வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
    நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளை நீ, அவணன்றோ மல்லல் வளம்
    சிறந்தோங்கி இருப்ப தம்மா


செந்தாமரை மலரின் பொன்மயமாகிய மகரந்தத்தைப் போல சிறந்து விளங்குகின்ற அழகிய உடலினை உடைய திருமகளே! கடலால் சூழப்பட்ட அழகிய இடத்தை உடைய உலகத்திலுள்ள இருளை ஓட்டுகின்ற விரிந்த ஒளி உடைய சூரியனாக, வெண்மையான சந்திரனாக, தேவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் பொங்கும் நெருப்பாக உலகத்தைக் காக்கின்ற பூங்கொடியே! நெடுக்கானகத்தில், மலையில், நிலத்தில், எங்கு நீ இருக்கின்றாயோ, அந்த இடத்தில் அல்லவோ புகழ்பெற்ற மிகுந்த செல்வமானது சிறப்படைந்து உயர்வாகத் திகழ்கின்றது, அம்மா!

 லக்ஷ்மி சுலோகம் பலன்

என்று தமிழ்க்குறுமுனிவன் பன்னியொடும்
    இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
"நன்றுனது துதி மகிழ்ந்தோம், நான்மறையோய்,
    இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
    ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
    தவ்வை அவண் மருவல் செய்யாள்".

என்று கூறித் தமிழை உணர்த்திய அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கியவுடன் (திருமகள் அகத்திய முனிவரைப் பார்த்து கூறினாள்) "நான்மறைகளிலும் வல்லவனே! நல்லது. உன்னுடைய புகழ்ப் பாடலுக்கு உள்ளம் களித்தோம். இப்புகழ்ப் பாடல்களைப் பாடியவர்கள் எல்லோரும் கெடாத பெரிய போகங்களை நுகர்வார்கள். இப்புகழ்ப் பாடல்கள் எழுதப்பெற்ற ஏடு, வளம்பொருந்திய வீட்டினிடத்தில் இருந்தால் வறுமையைக் கொடுக்கின்ற மூத்த தேவி அவ்விடத்தில் பொருந்துதலைச் செய்யமாட்டாள்".

About this blog

This blog is created to discuss the information about spirituality This blog consists The most important temples, mantras and stories related to spiritual whatever I know, I heard, I read through spiritual books will be described in this blog.

All of it is a journal of my journey on the search for True Bhakti. I am welcoming u all on this Spiritual journey...

I thank you all for spending your valuable time here. Your suggestion and feedbacks are welcome!

My Daily Prayer!

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத ­ளமையும் கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே
- அபிராமி பட்டர்
“Learning that goes not awry, a life span that is not shortened, and friendship that knows no guile,
Prosperity that never diminishes, youth that does not whither, and a body that sees no disease,
A mind that is never vexed, a wife whose love wavers not, and children who never know disobedience,
Fame that never decreases, a word that I go back on not, and charity that has no hurdles,
Wealth that is not thieved, a government that is never Adhaarmic, and a life that knows no despair,
At your esteemed feet, you gave me love and support,
and made me one amongst the great people who serve you,
The sister of he who lies in sleep on the milk ocean, the one who lives in the town of Kadavoor,
Oh thee, who separates not from one side of the body of Amutheeswarar,
Oh Goddess with the hands that bestows boons, bless us with these, Oh Abhiraami”
- Abhiraami Bhattar

Popular Posts

Krishna we cannot understand you completely. You cannot be conquered by knowledge. But you can be conquered and seen through Bhakthi

FEEDJIT Live Traffic Feed

Followers

Narayaneeyam.

Narayaneeyam slogam & Meaning is continuing on
http://onlynarayaneeyam.blogspot.com/

Labels